சமஸ்கிருதத்தில் கிரிக்கெட் வர்ணனைக்கான முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
காசியில் இதேபோன்ற முயற்சியைப் பகிர்ந்து கொண்ட அவர் தனது மனதின் குரல் இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.
குடிமகன் ஒருவரின் ட்விட்டர் பதிவை மேற்கோள்காட்டி, பிரதமர் ட்விட்டர் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:
“இதனைக் கண்டு மனம் மகிழ்ச்சி அடைகிறது... இந்த முயற்சியை மேற்கொண்டவர்களுக்கு வாழ்த்துகள்.
கடந்த ஆண்டு #மனதின்குரல் நிகழ்ச்சி ஒன்றில் இதேபோன்ற முயற்சியை நான் காசியில் பகிர்ந்துகொண்டேன். அதையும் பகிர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.