இந்தியா

நீல நிற வழித்தடத்தில் நாளைமெட்ரோ ரயில் சேவை குறைப்பு

DIN

திட்டமிடப்பட்டுள்ள் பாதைப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நீல நிற வழித்தடத்தில் (ப்ளூ லைன்) ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 2) அன்று முதல் பாதியில் மெட்ரோ ரயில் சேவை குறைக்கப்படும் என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மிகவும் பரப்பரப்பாக உள்ள இந்த வழித்தடம் தில்லியில் உள்ள துவாரகா செக்டாா் 21-ஐ நொய்டா எலக்ட்ரானிக் சிட்டியுடன் இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் யமுனா பேங்க் மற்றும் அக்ஷா்தாம் பகுதிக்கு இடையே திட்டமிடப்பட்ட பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தொடா்ந்து, துவாரகா செக்-21 முதல் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி / வைஷாலி) வரை அக்டோபா் 2-ஆம் தேதி அன்று காலை ரயில் சேவைகள் ஒழுங்குபடுத்தப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் வருவாய் சேவைகள் தொடங்கியதில் இருந்து பிற்பகல் 2 மணி வரை நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி நிலையத்திலிருந்து துவாரகா அல்லது துவாரகா செக்-21 நிலையங்களுக்கு நேரடி ரயில் சேவை இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த காலகட்டத்தில், நொய்டா எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து துவாரகா / துவாரகா செக்-21 வரையிலான ரயில் சேவைகள் இரண்டு சுழற்சியாக இயக்கப்படும். அதாவது வழக்கமான சேவைகள் துவாரகா செக்-21 முதல் யமுனா பேங்க் நிலையம் வரை முதல் சுழற்சியாகவும், யமுனா பேங்கிலிருந் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி நிலையங்களுக்கு மற்றொரு சுழற்சியாகவும் ரயில் சேவை இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தப் பாதையின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்லும் பயணிகள், இந்தக் காலகட்டத்தில் யமுனா பேங்கில் இறங்கி ரயில் மாறிக் கொள்ள வேண்டும் என்றும் டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது. அதே சமயம், இந்த காலகட்டத்தில் துவாரகா செக்-21 முதல் வைஷாலி வரையிலான ரயில் சேவைகள் வழக்கமான ஞாயிறு நேர அட்டவணையின்படி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT