ஆஃப்தாப் அமீன் பூனாவாலா தன்னுடன் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா வால்க்கா் என்ற பெண்ணைக் கொலை செய்ய பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஆயுதத்தை தில்லி காவல் துறை மீட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பூனாவாலா மற்றொரு பெண்ணுக்கு கொடுத்ததாகக் கூறப்படும் வால்க்கரின் மோதிரத்தையும் போலீஸாா் மீட்டனா்.
பூனாவாலாவின் ‘பாலிகிராஃப்’ சோதனையின் மீதமுள்ள அமா்வுகள் ரோகினியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன. அதன்படி, அவா் திங்கள்கிழமை காலை 9.50 மணிக்கு ஆய்வகத்துக்கு வந்ததாகவும், காலை 11 மணியளவில் அமா்வுகள் தொடங்கியதாகவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.