இந்தியா

முதுநிலை நீட்: 2.06 லட்சம் பேர் எழுதினர்

DIN


நிகழாண்டு முதுநிலை நீட் தேர்வு 267 நகரங்களில் 849 மையங்களில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டன. இதையடுத்து, முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால், முதுநிலை நீட் தேர்வானது திட்டமிட்டபடி நடைபெறும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்தது.

இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வு அனைத்து மையங்களிலும் இன்று மிகவும் அமைதியாக நடைபெற்றது. தேர்வு மையங்களில் தேர்வு நடத்துவதற்கு 1,700 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். 849 மையங்களில் நடைபெற்ற முதுநிலை நீட் தேர்வை 2,06,301 தேர்வர்கள் எழுதினர்.

இந்தத் தேர்வு 3 மணி நேரம் 30 நிமிடங்கள் நடைபெற்றது.

முன்னதாக, முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் கடந்த மே 13-ம் தேதி மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

2-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 11 மணி நிலவரம்

பயமோ, வருத்தமோ இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து நடக்கிறது: விஷாலின் அதிரடி பதிவு!

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

SCROLL FOR NEXT