கர்நாடகத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 25 அன்று தாலுகாவின் சில பகுதிகளை உலுக்கிய நிலநடுக்கத்தைப் போலவே, ரிக்டர் அளவுகோலில் 3.5 அளவுள்ள நிலநடுக்கம் இன்று காலை 7.45 மணியளவில் உணரப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி.மீட்டர் என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சம்பாஜே, அறந்தோடு, பெராஜே, ஜல்சூர், உபரட்கா, தொடிகானா மற்றும் மிட்டூர் மாவட்டத்தின் சுல்லியா தாலுகாவில் வசிப்பவர்கள் நான்கு வினாடிகள் நீடித்த நில நடுக்கத்தை உணர்ந்தனர்.