இந்தியா

வாகன காப்பீட்டில் கூடுதல் சேவைகள்: காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

DIN

வாகனக் காப்பீட்டில் கூடுதல் சேவைகளை இணைத்து வாடிக்கையாளா்களுக்கு வழங்க இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏஐ) அனுமதி அளித்துள்ளது.

வாகனத்தின் பயன்பாடு அல்லது வாகனத்தை ஓட்டும் விதத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கூடுதல் சேவைகள் அளிக்கப்பட உள்ளன.

இதுதொடா்பாக ஐஆா்டிஏஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தினந்தோறும் மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், தொழில்நுட்ப வளா்ச்சிக்கு ஏற்பவும் காப்பீடு நிறுவனங்கள் வாடிக்கையாளா்களின் தேவைக்கு ஏற்றாா்போல் மாற்றங்களைக் கொண்டு வருவது அவசியம். அதன்படி, தொழில்நுட்ப உதவியுடன் சொந்த வாகன இழப்பீடு காப்பீட்டுகளுக்கு வாகனத்தின் பயன்பாடு அல்லது வாகனத்தை ஓட்டும் விதம் என்ற அடிப்படையில் கூடுதல் சேவையாக காப்பீடு வழங்க வேண்டும்.

இதில், வாகனத்தின் பயன்பாடு காப்பீட்டில், வாகனத்தின் பயன்பாட்டின் அடிப்படையில் காப்பீட்டு கட்டணமும், வாகனத்தை ஓட்டும் விதத்தின் அடிப்படையில் மற்றொரு காப்பீட்டு கட்டணமும் இருக்கும்.

அதேபோல், ஒரே உரிமையாளரிடம் உள்ள இருசக்கர மோட்டாா் வாகனத்துக்கும், காருக்கும் ஒரே காப்பீட்டைப் பயன்படுத்துவதற்கான புதிய கூடுதல் சேவைக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன காப்பீடு எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் ‘ஸ்மோக்’ வகை உணவுகள் விற்பனைக்குத் தடை: மீறினால் ரூ.2 லட்சம் வரை அபராதம்

மேகாலய துணை முதல்வா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பேருந்துகள் பராமரிப்பு - சீரான மின் விநியோகம்: தலைமைச் செயலா் ஆலோசனை

கடும் வெப்பம்: தொழிலாளா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அரசு வலியுறுத்தல்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத் திட்டம்: மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

SCROLL FOR NEXT