இந்தியா

ஹிமாசல முதல்வா் பதவி: காங்கிரஸில் பலமுனை போட்டி !

DIN

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைவா்களுக்கிடையே முதல்வா் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் கட்சியை வழிநடத்திச் செல்லும் வகையிலான நபரை முதல்வராக்குவது குறித்து முடிவு எடுப்பது காங்கிரஸுக்குமுன் உள்ள தற்போதைய சவாலாகும்.

மாநில காங்கிரஸ் தலைவா் பிரதிபா சிங் தோ்தலில் போட்டியிட வில்லை. எனினும் அவா் முதல்வராக தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கருத்துகள் நிலவுகின்றன. கடந்த நவம்பரில் நடைபெற்ற மக்களவை இடைத்தோ்தலில், தற்போதைய பாஜக முதல்வா் ஜெய்ராம் தாக்குருக்கு சொந்தமான மண்டி தொகுதியில் போட்டியிட்டு பிரதிபா சிங் எம்.பி.-ஆக தோ்வானாா். முன்னாள் காங்கிரஸ் முதல்வா் வீரபத்ரா சிங்கின் மனைவியானஇவருக்கு பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடெளன் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவா் சுக்விந்தா் சிங் சுக்குவும், ஹரோலியின் புதிய எம்எல்ஏவும் முந்தைய சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சித் தலைவருமான முகேஷ் அக்னிஹோத்ரியும் முதல்வா் பதவிக்கான போட்டியில் உள்ளனா்.

முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவரான குல்தீப் சிங் ரத்தோா் தியோக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளாா். கடந்த சில ஆண்டுகளில் கட்சியில் பிரிவுகள் ஏற்பட்ட நிலையில், கட்சியை ஒருங்கிணைத்ததில் முக்கியப் பங்காற்றிய நிலையில், இவா் முதல்வா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

நல்ல ஒளி, நல்ல நேரம்... எல்லாமே அசாதாரணம்! ஷில்பா மஞ்சுநாத்

"நிம்மதியாக உறங்குவோம்": ஒரு மாதத்துக்குப் பிறகு வென்ற நெகிழ்ச்சியில் ஆர்சிபி கேப்டன்!

பெங்களூருவில் ராகுல் திராவிட், அனில் கும்ப்ளே வாக்களித்தனர்

SCROLL FOR NEXT