இந்தியா

இந்தியாவில் ஒருநாள் கரோனா பாதிப்பு 241ஆக குறைந்தது! 

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், 

இந்தியாவில் கரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த பல வாரங்களாகவே கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை கொடுத்துள்ளது. 

அந்தவகையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 241 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,46,74,190 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,244 ஆக குறைந்துள்ளது. கரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,647 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,39,299ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை மட்டும் 219.95 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT