இந்தியா

பிஎஸ்எஃப் உதயமான நாள்: எல்லையில் இனிப்புகளை ஏற்க மறுத்த பாகிஸ்தான்

DIN


புது தில்லி: பிஎஸ்எஃப் உதயமான நாளை முன்னிட்டு, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அளித்த இனிப்பை பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் வாங்க மறுத்துள்ளனர்.

பிஎஸ்எஃப் உதயமான நாளின்போது, வழக்கமாக, எல்லைப் பாதுகாப்பில் ஈடுபடும் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்குவது வழக்கம். ஆனால், வியாழக்கிழமையன்று இந்திய தரப்பில் வழங்கப்பட்ட இனிப்புகளை பாகிஸ்தான் வீரர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வீரர்களுடன் இனிப்புப் பரிமாறிக் கொள்வது வழக்கம். இந்த ஆண்டு தீபாவளி உள்ளிட்ட சில பண்டிகைகளின்போது இனிப்பு பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இம்முறை வியாழக்கிழமையன்று இனிப்பு வழங்கியபோது, பாகிஸ்தான் வீரர்கள் தங்களது மூத்த அதிகாரிகளிடமிருந்து இனிப்புகளை வாங்கிக் கொள்ளுமாறு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்று தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

1965ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டது. 

விமானப்படை, தரைப்படை, மற்றும் கடற்பிரிவு ஆகியவற்றை தனது சொத்துகளாகக் கொண்ட உலகின் தனித்துவமான படைப்பிரிவாக இது விளங்கி வருகிறது. 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது இந்தப் படை சிறப்பாகச் செயல்பட்டது மற்றும் அதன் பணியாளர்களுக்கு மகா வீர் சக்ரா மற்றும் வீர் சக்ரா உள்ளிட்ட மிக உயர்ந்த வீரப் பதக்கங்கள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரா துப்பாக்கி சுடுதல்: மோனாவுக்கு தங்கம்

சேவைகளைக் கட்டுப்படுத்தும் விவகாரம் மத்திய சட்டத்திற்கு எதிரான தில்லி அரசின் மனுவை பட்டியலிட பரிசீலிக்கப்படும்: உச்சநீதிமன்றம் உறுதி

மேயா், துணை மேயா் பதவிக்கான தோ்தலை நடத்த ஆம் ஆத்மி கட்சிதான் விரும்பவில்லை: எதிா்க்கட்சித் தலைவா் ராஜா இக்பால் சிங்

மேயா் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டதால் தில்லி மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு

உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு 4-ஆவது பதக்கம் உறுதி

SCROLL FOR NEXT