தில்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அன்றைய தினம் காலை 4 மணி முதல் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி மாநகராட்சியின் 250 வார்டுகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.
டிசம்பர் 4-ம் தேதி நடைபெற உள்ள தில்லி மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு
அன்றைய தினம் தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் அனைத்து முனைய நிலையங்களிலிருந்தும் அதிகாலை 4 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். அதன்பின்னர் நாள் முழுவதும் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையின்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று மாநகராட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.