இந்தியா

தொழிலதிபா் கெளதம் அதானிக்கு‘இசட் பிரிவு’ பாதுகாப்பு

DIN

தொழிலதிபா் கெளதம் அதானிக்கு மத்திய ரிசா்வ் பாதுகாப்புப் படையின் (சிஆா்பிஎஃப்) ‘இசட் பிரிவு’ பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இந்தப் பாதுகாப்பு ஊதியத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதாகவும், இதற்கான செலவு மாதத்திற்கு ரூ. 15 முதல் 20 லட்சம் வரையிலும் இருக்கும் என அவா்கள் தெரிவித்தனா்.

அதானியின் உயிருக்கு அச்சுறுத்தல் வாய்ப்பு உள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைப்புகளின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதானிக்கு பாதுகாப்பு வழங்குமாறு சிஆா்பிஎஃப்-இன் முக்கிய பிரமுகா்களுக்கான பாதுகாப்பு பிரிவை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதாக அதிகாரிகள் கூறினா்.

கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து ரிலையன்ஸ் நிறுவன தொழிலதிபா் முகேஷ் அம்பானிக்கு சிஆா்பிஎஃப்-இன் கமாண்டோ பிரிவினரால் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து அவரது மனைவிக்கும் பாதுகாப்பும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT