பாஜகவின் மேலிடப் பொறுப்புகளிலிருந்து மூத்த தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளது அரசியல் கவனத்தைப் பெற்றுள்ளது.
பாஜகவின் உயர்மட்ட குழுவின் புதிய நியமனங்கள் குறித்த அறிவிப்பை அக்கட்சி புதன்கிழமை வெளியிட்டது. கட்சியின் உட்சபட்ச முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இந்த அமைப்பிலிருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் உள்ளிட்ட பல மூத்த பாஜக தலைவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | மகாராஷ்டிர சட்ட மேலவைத் தலைவராக ஃபட்னவீஸ் நியமனம்
மேலும் பாஜக நாடாளுமன்றக் குழுவில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்பானந்தா சோனோவால், கே லக்ஷ்மன், இக்பால் சிங் லால்புரா, சுதா யாதவ், சத்யநாராயண் ஜாடியா உள்ளிட்டவர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.