இந்தியா

காவல் நிலையத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட பெண் காவலர்!

DIN

மகாராஷ்டிரத்தில் பெண் காவலர் ஒருவர் காவல் நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் தாணே நகரம் வாக்லே எஸ்டேட் பிரிவுக்கு உள்பட்ட ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் 34 வயது பெண் காவலர் நாயக் அனிதா பீம்ராவ் வாவல். 

இவர் இன்று பிற்பகல் 1. 30 மணியளவில் காவல் நிலையத்தில் தூக்கிட்டு நிலையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

காவல் நிலைய அறையில் துப்பட்டா கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

சொந்தப் பிரச்னை காரணமாக அவர் இந்த முடிவு எடுத்திருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT