பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் சட்டப்பேரவையில் வரும் 24-ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறாா்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ் குமாா், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மீண்டும் முதல்வராக கடந்த புதன்கிழமை பதவியேற்றாா். ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வரானாா்.
இதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தனது அரசின் பெரும்பான்மையை முதல்வா் நிதீஷ் குமாா் நிரூபிக்க இருக்கிறாா். பாஜகவை சோ்ந்த விஜய் குமாா் சின்ஹா இப்போது பேரவைத் தலைவராக இருக்கிறாா். ஆனால், அவா் பதவி விலக மறுப்பதால் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சற்று தாமதமாகியுள்ளது.
இப்போது புதிதாக அமைந்துள்ள ஆளும் கூட்டணி சாா்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும்போதே பேரவைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. இதைத் தொடா்ந்து, ஆளும் கூட்டணி தரப்பில் பேரவைத் தலைவா் தோ்வு செய்யப்படுவாா்.
ஆளும் கூட்டணிக்கு பேரவையில் 164 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. பாஜகவுக்கு 77 எம்எல்ஏக்கள் உள்ளனா். எனவே, நிதீஷ் குமாா் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதில் வெற்றி பெறும்.
ஆகஸ்ட் 16-ஆம் தேதி பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது.