கோவாவில் அரசு நடத்தும் தொடக்கப் பள்ளிகளைத் தத்தெடுக்க முன்வந்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் கோவா பிரிவு தலைவர் அமித் பலேகர்,
ஒரு ஆசிரியர் அல்லது குறைவான மாணவர்களுடன் இயங்கும் தொடக்கப் பள்ளிகளை இணைக்கவோ அல்ல மூடவோ மாநில அரசு விரும்புவதாகக் கூறினார்.
கல்வி இயக்குநரான ஷைலேஷ் ஜிங்காடேவை சந்தித்த பாலேகர், இதுபோன்ற பள்ளிகளைக் கட்சி தத்தெடுத்து தில்லி பள்ளிகளில் அரசு செய்த விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
எங்களை அரசியல் கட்சியாகப் பார்க்க வேண்டாம்.
மாநில அரசின் இந்த முடிவால் எந்த ஒரு மாணவரும் பள்ளியை விட்டு வெளியேறாமல் இருக்க நாங்கள் முன்வந்து உதவத் தயாராக இருக்கிறோம் என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார்.