இந்தியா

இலவசத் திட்டங்களை எதிர்ப்பவர்கள் துரோகிகள்: கேஜரிவால்

DIN

ஏழை மக்களுக்காக அரசு வழங்கும் இலவசங்களை எதிர்ப்பவர்கள் துரோகிகள் என ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

பெருநிறுவனத்தைச் சேர்ந்த முதலாளிகளின் ரூ.10 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்வதுதான் மக்களுக்கு அரசு செய்யும் துரோகமே தவிர, ஏழை மக்களுக்கு இலவசத் திட்டங்களை வழங்குவதை அல்ல எனவும் சாடினார். 

தில்லியில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் மத்திய அரசால், இலவச கல்வி மற்றும் இலவச மருத்துவத்திற்கு எதிரான சூழல் நாட்டில் உருவாகியுள்ளது. 

நாம் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளோம். இதனையொட்டி மக்களுக்கான இலவசத் திட்டங்களை மேலும் வலுப்படுத்தவுள்ளோம். ஆனால் இலவசத் திட்டங்களுக்கு எதிராக பாஜக அரசு உருவாக்கியுள்ள சூழலுக்கு எதிராக அவை நடமுறைப்படுத்தப்படும். 

ஏழை மக்களுக்காக அரசு அறிவிக்கும் இலவச திட்டங்களை எதிர்ப்பவர்கள் துரோகிகள். பாஜக அரசு தங்களது நண்பர்களான பெருமுதலாளிகளின் நலனுக்காக ரூ.10 லட்சம் கோடி வாராக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. அவ்வாறு பெருமுதலாளிகளுக்கு சலுகைகளை வழங்குபவர்கள்தான் துரோகிகள். 

வாக்குகளுக்காக மாநில அரசுகள் இலவசங்களை வழங்குவதாக மோடி கூறுகிறார். இலவசங்களால் நாடு முன்னேற்றமடையாது எனவும் குறிப்பிடுகிறார். ஆனால் உண்மையில் அவர் ஏழை மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இலவசங்களை எதிர்ப்பது மிகவும் ஆபத்தானது என சுட்டிக்காட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

வாக்குப்பதிவு இயந்திரத்தை இரும்புக் கம்பியால் தாக்கிய இளைஞர்: பரபரப்பான தேர்தல் மையம்!

மூட்டை தூக்கும் புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் விடியோ வைரல்!

சந்தானத்தின் ‘இங்க நான்தான் கிங்கு’ டிரைலர்!

சுட்டெரிக்கும் வெயிலிலும் வாக்களிக்க கேரள மக்கள் ஆர்வம்!

SCROLL FOR NEXT