இந்தியா

கோழிக்கோடு விமான விபத்து நினைவுநாள்: உயிருடன் தப்பியவர்கள் செய்யும் கைமாறு

DIN


கோழிக்கோடு: கேரள மாநிலம் கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள், சம்பவ இடத்தில் கூடி அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.

2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி துபையிலிருந்து வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டு துண்டுகளாக உடைந்தது. 

அன்று நிகழ்ந்த கோர விபத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இரண்டு எரிவாயு டேங்குகளும் சேதமடைந்து எரிபொருள் கசிந்து கொண்டிருந்தது. எந்த நேரத்திலும் என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை..

ஆனால், விபத்து நிகழ்ந்ததைப் பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடோடி வந்து, விமானத்துக்குள் சிக்கியிருந்தவர்களை மிகவும் சிரமப்பட்டு மீட்டனர். அவர்களுக்கு வெறும் நன்றி என்று சொல்லிவிட முடியுமா என்ன? வாழ்வை மாற்றிய விமான விபத்தில் இன்று உயிர் பிழைத்திருக்கிறோம் என்றால் அதற்கு அங்கிருந்த சில நல்லுள்ளங்கள்தான் காரணம் என்கிறார்கள் விபத்திலிருந்து மீண்டவர்கள்.

அவர்களுக்கு கைமாறு செய்யும் வகையில், அப்பகுதியில் மக்களின் அடிப்படைத் தேவையான மருத்துவமனை ஒன்றைக் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்களும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என  ஏராளமானோர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும் தங்களுக்குக் கிடைத்த இழப்பீடு மற்றும் நிவாரணத் தொகையிலிருந்து பணத்தைத் திரட்டி சுமார் 50 லட்சத்தைச் சேர்த்துள்ளனர். அந்தத் தொகையைக் கொண்டு சிராயில் என்ற பகுதியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தைக் கட்டுவதற்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விபத்து நேரிட்டதும் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் முதன் முதலில் ஓடி வந்து உதவியவர்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 2-ம் கட்ட தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: பாஜக நிர்வாகி பலி

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

SCROLL FOR NEXT