இந்தியாவில் இதுவரை 83.39 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 71,38,205 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம் 83,39,90,049 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.
வயதுவாரி விவரங்கள்:
18 - 44 வயது | முதல் தவணை - 33,77,76,289 இரண்டாம் தவணை - 6,69,10,347 |
45 - 59 வயது | முதல் தவணை - 15,37,13,610 இரண்டாம் தவணை - 7,15,16,250 |
60 வயதுக்கு மேல் | முதல் தவணை - 9,83,05,587 இரண்டாம் தவணை - 5,35,93,374 |
சுகாதாரத்துறை | முதல் தவணை - 1,03,70,205 இரண்டாம் தவணை - 87,85,834 |
முன்களப் பணியாளர்கள் | முதல் தவணை - 1,83,47,309 இரண்டாம் தவணை - 1,46,71,244 |
மொத்தம் | 83,39,90,049 |