இந்தியா

உ.பி: அரசு வேலை வாங்கித் தருவதாக 500 பேரை ஏமாற்றிய 4 பேர் கைது

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 500 பேரை ஏமாற்றிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 500 பேரிடம் பல லட்சம் ரூபாயை ஏமாற்றிய 4 பேரை அம்மாநில சிறப்பு படையினர் கைது செய்திருக்கிறார்கள்.

மேலும் கைதானவர்களிடமிருந்து போலி அரசுப் பணி ஆணைச் சான்றிதழ் , 9 ஏடிஎம் கார்டுகள் , 6 கைபேசிகள் , சட்டமன்ற நுழைவுச் சீட்டு , 4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ரூ.2,387 ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிறப்பு படையின் துணைக் காவல் கண்காணிப்பாளர் விக்ரம் சிங் , ‘ அப்பாவி மக்களிடம் அரசுப் பணி ஆசையைத் தூண்டி அவர்களிடமிருந்து பெரிய தொகையை போலி நிறுவனங்களின் பெயரில் இவர்கள் பெற்றது உறுதியாகியிருக்கிறது’ எனத் தெரிவித்தார்.

கைதானவர்கள்: அருண்குமார் துபே , அனிருத்தா பாண்டே , காலித் முனாவர் , அனுராக் மிஸ்ரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை பல்கலை. செயல்பாடுகள்: பொதுக் குழுவில் விவாதிக்க முடிவு

ஹுமாயூன் மஹாலில் சுதந்திர தின அருங்காட்சியகம்: மக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

பாஜக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: நிா்வாகிகள் மீது 5 பிரிவுகளில் வழக்கு

கோரமண்டல் இன்டா்நேஷனல் தலைவராக அருண் அழகப்பன் நியமனம்

SCROLL FOR NEXT