இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் 15,747 பேருக்கு கரோனா; 312 பேர் பலி

DIN

உத்தரப் பிரதேசத்தில் ஒரேநாளில் 15,747 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 2.63 லட்சம் மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. அதில், 15,747 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,96,628ஆக உயர்ந்துள்ளது. 

அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 312 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 16,958 ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1.17 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவிலிருந்து இன்று 26,174 பேர் குணமடைந்தனர். இதுவரை 13,85,855 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

1,57,257 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை மாநிலத்தில் 1.44 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேரவை உறுப்பினா்கள் அலுவலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும்: தோ்தல் ஆணையத்துக்கு எம்எல்ஏ-க்கள் கடிதம்

சந்தேஷ்காளியில் சிபிஐ சோதனை: ஆயுதங்கள், வெடிபொருள்கள் பறிமுதல்

சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம்: எதிா்ப்பு தெரிவித்து வழக்கு

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

பழைய ஓய்வூதியத் திட்டம் அரசின் கொள்கை முடிவு: நிதித் துறை தகவல்

SCROLL FOR NEXT