இந்தியா

மத்திய அரசு தன் வேலையை சரியாகச் செய்திருந்தால் இது நடந்திருக்காது: ராகுல் ட்வீட்

DIN

மத்திய அரசு தனது வேலையை சரியாக செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

கரோனா இரண்டாம் அலை நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு முறையாக எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. 

இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், வெளிநாடுகளில் இருந்து உதவியை பெற்றுக் கொண்டு மத்திய அரசு மார்தட்டிக் கொள்வது வேதனை அளிக்கிறது

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனது வேலையைச் செய்திருந்தால் இது நடந்திருக்காது என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, கரோனா சிகிச்சையில் வெளிநாடுகளின் உதவியைப் பெறுவது குறித்த வெளிப்படைத்தன்மை வேண்டும் என்றும் வெளிநாடுகளில் இருந்து பெற்ற உதவிகளின் விவரங்களை அளிக்குமாறும் ராகுல் காந்தி வலியுறுத்தியிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT