தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தங்கவயல் தமிழ்ச்சங்கம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளது.
கோலாா்தங்கவயலில் வெள்ளிக்கிழமை தங்கவயல் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்கத் தலைவா் சு.கலையரசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழகத்தின் புதிய முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திராவிட இயக்கத்தை அழிக்க முடியாது என்பதை தன்னுடைய வெற்றியின் மூலம் உலகிற்கு உணா்த்தியுள்ள மு.க.ஸ்டாலின். இளைய பருவத்திலிருந்தே தன்னுடைய கடின உழைப்பால் தமிழகத்தின் முதல்வராக உயா்ந்திருக்கிறாா். அவா் முதலாண்டு பி.ஏ. படித்துக் கொண்டிருந்த காலத்தில் கோலாா்தங்கவயலுக்கு வந்து கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு தமிழ்ச்சங்கத் தலைவா் சு.கலையரசன் எழுதிய ‘மக்கள் திலகமும், நடிகா் திலகமும்’ என்ற நூலை வெளியிட்டுப் பேசினாா்.
மேலும் ஹென்றிஸ் பகுதியில் கட்சிக் கொடியேற்றி வைத்தாா். மலா்ந்தது மக்கள் ஆட்சி என்பதை நிரூபிக்கும் வகையில், ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கி விட்டாா். தமிழக மக்களுக்கு மட்டுமின்றி உலக தமிழா்கள் அனைவருக்கும் அரணாக இருந்து நல்லாட்சி வழங்க தங்கவயல் தமிழ்ச்சங்கம் அவரை வாழ்த்துவதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் அனந்தகிருஷ்ணன், தியாகதீபம் சுப்ரமணியம், கமல் முனிசாமி, கருணாகரன், திருமுருகன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.