மகாராஷ்டிரத்தின் முப்பை-நாசிக் நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் தீப்பிடித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஷாஹாபூர் பகுதியில் உள்ள வாகோலியில் அமைந்துள்ள பிரிவில் அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தாணே மாநகராட்சியின் பேரிடர் மேலாண்மை தலைவர் சந்தோஷ் கதம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக மேலும் அவர் கூறியது,
இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பதால், வளாகத்தில் தீ விரைவாகப் பரவியது என்றார்.
சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு இயந்திரங்கள் விரைந்தன. மேலும், தீ விபத்தைத் தடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரி தெரிவித்தார். இந்த விபத்தில் எந்த உயிர்ச்சேதமும், காயமும் ஏற்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.