மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,744 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை கரோனா பாதிப்பு 11 ஆயிரத்தைத் தாண்டிய நிலையில், திங்கள்கிழமை 8 ஆயிரத்துக்கு குறைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 22,28,471 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9,068 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 22 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 20,77,112 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 52,500 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி அந்த மாநிலத்தில் 97,637 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.