லடாக்: லடாக்கில் சனிக்கிழமை காலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது. இந்த நில அதிா்வு ரிக்டா் அளவில் 3.6 அலகாக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிா்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.
சனிக்கிழமை காலை 5.11 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் பாதிப்பு லடாக் பகுதிகளில் ஆங்காங்கே உணரப்பட்டது. இதனால், மக்கள் பீதிக்குள்ளாகினா். ஆனால், இந்த நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.