இந்தியா

ஜார்க்கண்ட் : மாவோயிஸ்டுகள் தாக்குதலில் காவல் அதிகாரி உள்பட மூவர் பலி

DIN

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலியாகினர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள ஹோயாஹட்டு கிராமத்தில் வியாழக்கிழமை காலை ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததில் காவல் அதிகாரி உள்பட 3 பேர் பலியாகினர்.

மேலும் இந்தத் தாக்குதலில் 5 பாதுகாப்புப்படை அதிகாரிகள் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகளை குற்றம்சாட்டியுள்ள காவல்துறையினர் இதுகுறித்து மேலும் விசாரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு கிளியே.. ரவீனா தாஹா!

சூர்யா படத்துக்கு முன்பாக இளம் நாயகனை இயக்கும் சுதா கொங்கரா?

சென்னை விமான நிலைய குப்பைத் தொட்டியில் ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் கண்டெடுப்பு

கேரளத்தில் வாக்குப்பதிவின் போது மயங்கிவிழுந்து 4 பேர் பலி!

அழகு தேவதை - சாக்ஷி அகர்வால்!

SCROLL FOR NEXT