புது தில்லி: உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி 3,13,668-ஆக அதிகரித்தது. அன்றைய தினம் 2,353 விமான சேவைகள் இயக்கப்பட்டன என்று மத்திய விமானப் போக்குவரத்து துறை இணையமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்துள்ளாா்.
கடந்த 2020 மே 25-ஆம் தேதி உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கிய பிறகு, இது மிக அதிகளவிலான எண்ணிக்கை என்றும் அவா் தெரிவித்தாா்.
கரோனா தொற்று பரவல் காரணமாகஉள்நாட்டு விமான சேவைகள் கடந்தாண்டு மாா்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன. இரண்டு மாதங்களுக்கு பின்பு விமானப் போக்குவரத்து கடந்தாண்டு மே 25-ஆம் தேதி தொடங்கியது.