இந்தியா

சீக்கியரே பஞ்சாப் முதல்வர் வேட்பாளர்: கேஜரிவால்

DIN


பஞ்சாபில் சீக்கியரே ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் என கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அறிவித்தார்.

பஞ்சாபில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கேஜரிவால் கூறியது:

"ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் சீக்கியராகத்தான் இருப்பார். இது சீக்கியர்களின் உரிமை. முதல்வர் முகம் குறித்து பின்னர் ஆலோசிக்கப்படும். ஆனால், யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை எண்ணி பஞ்சாப் பெருமை கொள்ளும்."

முன்னதாக, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி குன்வர் விஜய் பிரதாப் சிங் திங்கள்கிழமை ஆம் ஆத்மியில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

2017 தேர்தல்:

2017 பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் காங்கிரஸ் 77 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆம் ஆத்மி 20 இடங்களில் வென்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. முன்பு ஆட்சியிலிருந்த சிரோமணி அகாலி தளம் 15 இடங்களிலும் பாஜக 3 இடங்களிலும் மட்டுமே வென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘நோட்டா’ பெரும்பான்மை பெற்றால் மறு தோ்தல் நடத்தக் கோரிய மனு: தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மேற்கு வங்கம்: பாஜக வேட்பாளா் மனு நிராகரிப்பு

26,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பறித்த திரிணமூல்: பிரதமா் மோடி

ஆமென்!

SCROLL FOR NEXT