பல்வேறு மாநிலங்களைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளன.
இந்நிலையில், தெலங்கானா மாநிலத்திலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் பிளஸ் 1 மாணவர்களும் நேரடியாக பிளஸ் 2 வகுப்புக்கு தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
'மாநிலத்தில் தற்போது நிலவும் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 2020-21 கல்வியாண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யப்படுகிறது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும்' என்று மாநில அரசு கூறியுள்ளது.
அதேபோன்று பிளஸ் 1 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்றும் அவர்கள் தற்போது பிளஸ் 2 ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.