ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் 18 நாள்கள் முன்கூட்டியே தென்மேற்குப் பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் வழக்கமாக தென்மேற்குப் பருவ மழை தொடங்கும் காலத்துக்கு 17 முதல் 18 நாள்கள் முன்கூட்டியே ஜூன் 13-ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கியிருப்பதாக அறிவிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜம்மு - காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்துக்கு பரவலாக லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.