புதிய கல்விக் கொள்கை குறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடன் பிரதமர் மோடி வியாழக்கிழமை உரையாற்றுகிறார்.
தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கி ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு காணொலி மூலம் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
இதில், பல்வேறு மாநிலங்களின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் மற்றும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
மேலும், இந்த நிகழ்வின்போது கல்விதுறையில் பல்வேறு திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது.