இந்தியா

முதன்முறையாக வங்கதேசத்துக்கு 200 மெட்ரிக் டன் பிராண வாயு

DIN

முதல்முறையாக, இந்தியாவில் இருந்து வங்கதேசத்துக்கு 200 மெட்ரிக் டன் பிராண வாயு அனுப்பப்படுகிறது.

இந்திய ரயில்வேயின் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றன. ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அண்டை நாடுகளுக்கு பயணிப்பது இதுவே முதல் முறையாகும். 200 மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயுவை வங்கதேசத்தின் பேனாபோலிற்கு எடுத்துச் செல்வதற்காக தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தின் கீழ் இயங்கும் சக்ரதா்பூா் பிரிவில் (ஜாா்க்கண்ட் மாநிலம்) முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 10 கொள்கலன்களில் 200 மெட்ரிக் டன் மருத்துவ பிராண வாயுவை நிரப்பும் பணி சனிக்கிழமை காலை 09.25 மணிக்கு நிறைவடைந்தது.

இந்திய மாநிலங்களுக்கு தேவைப்படும் மருத்துவ பிராண வாயுவை கொண்டு சோ்ப்பதற்காக கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவை நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. இதன் மூலம் 15 மாநிலங்களுக்கு 480 ரயில்களில் சுமாா் 35,000 மெட்ரிக் டன் பிராணவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ரயில் மூலம் வங்கதேசத்துக்கு பிராண வாயு அனுப்பப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

விராலிமலையில் காவிரி குழாய் உடைப்பால் குடிநீா் வீண்: நிரந்தரத் தீா்வு காண கோரிக்கை

ஆலவயல் கிராமத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் களப்பயிற்சி

மின்மாற்றியை பழுது நீக்கம் செய்யக் கோரி கீரமங்கலத்தில் விவசாயிகள் சாலை மறியல்

SCROLL FOR NEXT