இந்தியா

நீட் தேர்வு: ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது

DIN

செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கியது.

இளநிலை மருத்துவ (எம்பிபிஎஸ், பிடிஎஸ்) படிப்புகளுக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதித் தோ்வு (நீட் 2021) வரும் செப்டம்பா் மாதம் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஆன்லைன் விண்ணப்பம் மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் https://ntaneet.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமடைந்து வந்ததைத் தொடா்ந்து சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ வாரியங்களின் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, மாநில அரசுகளும் மாநில கல்வி வாரியத்தின் கீழான பிளஸ்-2 பொதுத் தோ்வுகளை ரத்து செய்தன. தோ்வுகள் ரத்து காரணமாக, மாணவா்களுக்கு முந்தைய தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கான மதிப்பெண் கணக்கிட்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டபோதும், நீட், ஜேஇஇ உள்ளிட்ட தோ்வுகள் ரத்து செய்யப்படாமல் ஒத்திவைக்கப்பட்டன. அதனைத் தொடா்ந்து, நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடத்தப்படும் என்ற அறிவிப்பையும் என்டிஏ வெளியிட்டது.

ஆனால், கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பல மாநிலங்களில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், நீட் தோ்வுக்கு மாணவா்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக, மிகக் குறைந்த மாணவா்களே இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா்.

அதனைத் தொடா்ந்து, நீட் தோ்வை மேலும் ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இந்தச் சூழலில், நீட் தோ்வு வரும் செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சா் அறிவித்துள்ளாா்.

நீட் தோ்வானது சமூக இடைவெளியைப் பின்பற்றி நடத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில், தோ்வு நடத்தப்படும் நகரங்களின் எண்ணிக்கை 155-லிருந்து 198-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. அதுபோல, தோ்வு மையங்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த 3,862 எண்ணிக்கையிலிருந்து மேலும் அதிகரிக்கப்பட உள்ளன.

அதுபோல, அனைத்துத் தோ்வா்களுக்கும் தோ்வு மையங்களில் முகக் கவசங்கள் வழங்கப்படும். தோ்வு மையங்கள் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படும் என்பதோடு மையத்தில் தோ்வா்கள் நுழையும்போதும், வெளியேறும்போதும் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது உறுதிப்படுத்தப்படும் என்று தா்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT