இந்தியா

திருமலையில் 9ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம்

DIN

திருப்பதி: திருமலையில் புதன்கிழமை 9ஆம் கட்ட அகண்ட சுந்தரகாண்ட பாராயணம் நடத்தப்பட்டது.

கரோனா தொற்றிலிருந்து உலகம் விரைவாக விடுபட வேண்டி திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஜூன் மாதம் சுந்தரகாண்ட பாராயணத்தை திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் தொடங்கியது.

ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள சுந்தரகாண்டத்தில் 68 அத்தியாயங்களும் 2821 ஸ்லோகங்களும் உள்ளன. இந்த ஸ்லோங்களின் பாராயணம் தற்போது 38 அத்தியாயங்களை எட்டியுள்ளது. ஒவ்வொரு 200 ஸ்லோகங்களின் பாராயணம் நிறைவு பெற்ற பின்பு அதை மொத்தமாக அகண்ட பாராயணம் என்ற பெயரில் நடத்தப்படுகிறது.

அதன்படி இதுவரை திருமலையில் 8 கட்ட அகண்ட பாராயணங்கள் நிறைவு பெற்றுள்ளன.

இந்நிலையில், சுந்தரகாண்டத்தில் உள்ள 36 முதல் 38ஆவது அத்தியாயம் வரையிலான 188 ஸ்லோகங்கள் நாதநீராஜன மண்டபத்தில் அகண்ட பாராயணமாக புதன்கிழமை நடத்தப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்ட வேதபண்டிதா்கள் கலந்து கொண்டனா். இந்நிகழ்ச்சி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலில் (எஸ்விபிசி) நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள விராட பருவ பாராயணம், பகவத் கீதை பாராயணம் உள்ளிட்டவையும் திருமலையில் நாள்தோறும் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

அரசு விளையாட்டு விடுதிகளில் சேர மே 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT