திருப்பதி: ஏழுமலையானின் பெயரில் நடத்தப்பட்டு வரும் வேதபரிரக்ஷண அறக்கட்டளைக்கு சென்னையைச் சோ்ந்த வசந்தா பாலசுப்ரமணியம் என்பவா்ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் நாதநீராஜன மண்டபத்தில் புதன்கிழமை காலை ஒப்படைத்தாா்.