ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதி என கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் உள்ள வி.கே.சசிகலாவின் தண்டனைக் காலம் முடிந்து அவர் நாளை மறுநாள்(ஜன.27) விடுதல் ஆகவிருக்கிறார்.
இதனிடையே சில நாள்களுக்கு முன்னதாக சசிகலாவுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு கரோனா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரது விடுதலை தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், சசிகலா வருகிற 27 ஆம் தேதி விடுதலை செய்யப்படுவது உறுதி என கர்நாடக சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நாளை விடுமுறை நாள் என்பதால் சசிகலா விடுதலை தொடர்பாக ஆவணப் பணிகள் இன்றே முடிக்கப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.