இந்தியாவில் இருந்து 15 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மியான்மர் நாட்டிற்கு அனுப்பப்பட்டன.
இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.
இந்நிலையில் மியான்மர் நாட்டிற்கு விமானம் மூலம் 15 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. கரோனா தடுப்பூசிகள் வெள்ளிக்கிழமை மியான்மர் சென்றடைந்ததாக மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக பூடான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு மத்திய அரசால் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.