இந்தியா

மதம் சார்ந்த பேச்சுகளால் வன்முறையைத் தூண்டுகிறது பாஜக: திரிணமூல்

DIN

மதம் சார்ந்த பேச்சுகளால் மக்களிடையே பாஜக வன்முறையைத் தூண்டுவதாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிர்ஹாத் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இது தொடர்பாக பேசிய அவர், ''மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் வங்கதேசத்தினர் மற்றும் ரோஹிங்கியாக்கள் 10 சதவிகிதத்தினர் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.

இது தேர்தல் ஆணையத்தின் மீதான பாஜகவின் நேரடி தாக்குதல். மேற்கு வங்க மக்களிடையே பாஜக வெறுப்புணர்வை வளர்க்கிறது.

மதம் சார்ந்த பிரசார பேச்சுகள் மூலம் மக்களிடையே வன்முறையை பாஜக தூண்டுகிறது. இதனை தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும். வெளிப்படையான மற்றும் அமைதியான தேர்தல் தான் நாங்கள் எதிர்பார்ப்பது. ஆனால் பிளவு உண்டாக்கி வாக்கிற்காக மக்களை அவர்கள் தீவிரவாதிகளாக மாற்றி வருகின்றனர்'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

ரூ.4 கோடி சிக்கிய வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

SCROLL FOR NEXT