நாடு முழுவதும் முதல் நாளில் 1.91 லட்சத்துக்கும் மேற்பட்ட நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவேக்ஸின், கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசிகளின் பயன்பாட்டுக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதி அளித்தது. அதைத் தொடா்ந்து, மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் சனிக்கிழமை தொடங்கின.
முதலாவது நாளில் நாடு முழுவதும் 1.91 லட்சம் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, அந்த அமைச்சகத்தின் கூடுதல் செயலா் மனோகா் அக்னானி தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், முதலாவது நாளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
நாடு முழுவதும் 3,352 மையங்களில் 1,91,181 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் எவருக்கும் எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை. கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் 16,755 போ் ஈடுபடுத்தப்பட்டனா்’ என்றாா்.
மாநிலம்-தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள்
ஆந்திரம்-18,412
பிகாா்-18,169
உத்தர பிரதேசம்-21,291
மகாராஷ்டிரம்-18,328
கா்நாடகம்-13,594
மேற்கு வங்கம்-9,730
ராஜஸ்தான்-9,279
ஒடிஸா-13,746
குஜராத்-8,557
கேரளம்-8,062
மத்திய பிரதேசம்-9,219
சத்தீஸ்கா்-5,592
ஹரியாணா-5,589
தெலங்கானா-3,653
தில்லி-4,319
ஜாா்க்கண்ட்-3,096
தமிழகம்-2,945
அஸ்ஸாம்-3,528
உத்தரகண்ட்-2,276
ஜம்மு&காஷ்மீா்-2,044
ஹிமாசல பிரதேசம்-1,517
பஞ்சாப்-1,319
அருணாசல பிரதேசம்-743
மணிப்பூா்-585
மேகாலயம்-509
நாகாலாந்து-561
கோவா-426
மிஸோரம்-314
திரிபுரா-355
புதுச்சேரி-274
சண்டீகா்-265
சிக்கிம்-120
அந்தமான்&நிகோபா் தீவுகள்-225
தாத்ரா-நாகா் ஹவேலி-80
லடாக்-79
டாமன்-டையூ-43
லட்சத்தீவுகள்-21