ராஜஸ்தானில் மின்கம்பத்தில் பேருந்து மோதி தீ பிடித்து எரிந்த விபத்தில் ஓட்டுநர், நடத்துநர் உள்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டம் மஹேஷ்பூர் பகுதியில் சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக மாவட்ட ஆட்சியர் லால் கோயல் தெரிவித்துள்ளார்.
விபத்து நடத்த சம்பவ இடத்திலேயே ஓட்டுநரும், நடத்துநரும் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் வந்த பயணிகள் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விபத்தில் 17 பேர் படுகாயமடைந்தனர். அதில் 7 பேர் தீவிர சிகிச்சைக்காக ஜோத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.