புதிய வேளாண் சட்டங்கள் குறித்து அரசு யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் விமரிசித்துள்ளார்.
இதுபற்றி தொடர்ச்சியான சுட்டுரைப் பதிவுகளில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
"உண்மை என்னவென்றால் யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. குறிப்பாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கவில்லை. வேளாண் சட்டங்கள் அவசர சட்டங்களாக நிறைவேற்றுவதற்கு முன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவிக்கிறது. ஆனால் அவை பொய் என்பது ஆர்டிஐ-இன் பதில்கள் மூலம் தெரியவந்துள்ளது.
எதிர்பார்த்தபடியே விவசாயிகள் மற்றும் அரசுக்கிடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. சர்ச்சைக்குரிய சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு ஒப்புக்கொள்ளாததால், அரசிடம்தான் தவறு இருக்கிறது."