பரபரப்பான அரசியல் சூழ்நிலையின் மத்தியில் பாஜக மூத்தத் தலைவரும் மத்திய அமைச்சருமான ராஜ்நாத் சிங் நாளை (பிப்.26) மேற்குவங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
வரவுள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மத்தியில் பல்வேறு பாஜக தலைவர்கள் மேற்குவங்க மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாளை (பிப்.25) மேற்குவங்க மாநிலத்தின் பாலூர்காட் பகுதியில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கலந்து கொள்ள உள்ளார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த பேரணிக்கு ஆளும் திரிணமூல் அரசு அனுமதி மறுத்ததையடுத்து பேரணி ரத்து செய்யப்பட்டது.
மேற்கு வங்கத்தில் 294 சட்டமன்ற இடங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.