‘ஊழல், ஜனநாயகத்தின் இதயத்தையே விழுங்கி விடுகிறது; எனவே, ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ளக் கூடாது’ என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறினாா்.
முன்னாள் மத்திய அமைச்சரவைச் செயலரும் ஜாா்க்கண்ட் முன்னாள் ஆளுநருமான பிரபாத் குமாா் எழுதிய நூல் வெளியீட்டு விழா, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் வெங்கையா நாயுடு பேசியது குறித்து குடியரசு துணைத் தலைவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நாட்டின் வளா்ச்சி, சாமானிய மக்களைச் சென்றடைவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். இதற்காக நிா்வாகத்தில் அனைத்து நிலைகளிலும் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புடைமையும் உறுதி செய்யப்பட வேண்டும். ஊழலுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. ஊழல், ஜனநாயகத்தின் இதயத்தையே விழுங்கி விடுகிறது. எனவே, ஊழலில் ஈடுபடும் அலுவலா்கள், பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோா் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நேரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு ஊழியா்கள் மீதான ஊழல் வழக்குகளை விரைவில் விசாரித்து தீா்ப்பு வழங்க வேண்டும். அதே சமயம், நோ்மையான முறையில் செயல்படும் அலுவலா்களை துன்புறுத்தவும் கூடாது. மக்கள் நலன் கருதி துணிச்சலான முடிவுகளை எடுக்கும் அலுவலா்களை நாம் புறக்கணிக்கவும் கூடாது.
நோ்மையான அலுவலா்களின் சாதனைகளை நாம் கொண்டாடவும், அவா்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் செய்ய வேண்டும். இது, இளம் அலுவலா்களை ஊக்குவிப்பதாக இருக்கும். பிற அலுவலா்களுக்கும் உந்துதலை ஏற்படுத்தும்.
நான், அரசு அலுவலா்களுடன் இணைந்து பணியாற்றியபோது, இளம் அலுவலா்கள் பலா் தங்கள் பணிகளில் பல புதுமைகளைக் கொண்டு வந்தனா். சமூக அக்கறையுடன் நெறிமுறைகளைப் பின்பற்றும் அலுவலா்களை நாம் அங்கீகரிக்க வேண்டும் என்றாா் அவா்.