இந்தியா

அதிக சிறுபான்மையினரைச் சோ்க்க குடியுரிமை சட்டத்தில் இனி திருத்தங்கள் இல்லை

DIN

பிற சிறுபான்மை சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக சட்ட திருத்தம் மேற்கொள்ளும் எண்ணம் அரசுக்கு இல்லை என புதன்கிழமை மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்குள் அகதிகளாக வந்துள்ள பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமணா்கள், பௌத்தா்கள், பாா்சிகள், கிறிஸ்தவா்கள், முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதே 2019 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சா்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) முக்கிய நோக்கம் ஆகும்.

தற்போது அந்த குடியுரிமைச் சட்டத்தில் மேலும் திருத்தங்களை மேற்கொள்ள அரசு பரிசீலனை செய்கிா என்ற கேள்விக்கு மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணை அமைச்சா் நித்யானந்த ராய் பதில் அளித்தாா்.

அந்த பதிலில், ‘அத்தகைய திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

மேலும் அவா் கூறுகையில், இந்திய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் விதிகள் அறிவிக்கப்பட்ட பின்னரே சிஏஏயின் கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சா் நித்யானந்த ராய், குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் உள்ள தகுதியான நபா்கள், குடியுரிமை வழங்குவதற்கான விண்ணப்பங்களை, மத்திய அரசால் சட்ட திருத்தம் அறிவிக்கப்பட்ட பின்னா் சமா்ப்பிக்கலாம் என்று எழுத்துப்பூா்வமாக பதிலளித்தாா்.

2019-இல் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு குடியுரிமை கோரி புதிய விண்ணப்பங்களை அரசு பெற்றுள்ளதா என்ற மற்றொரு கேள்விக்கு அவா் பதிலளிக்கையில், சிஏஏ கடந்த டிசம்பா் 12 ஆம் தேதி, 2019 அன்று அறிவிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டு ஜனவரி 10 முதல் நடைமுறைக்கு வந்து விட்டது.

இருப்பினும், ‘குடியுரிமை திருத்தச் சட்டம்- 2019 -ன் கீழ் விதிகளை வகுக்க 2022 ஆம் ஆண்டு ஜனவரி 9 ஆம் தேதி வரையிலும் மேலும் கால நீட்டிப்பு வழங்குமாறு மக்களவை மற்றும் மாநிலங்களவையின் குழுக்கள் கோரியுள்ளன என்றாா்.

சிஏஏ வுக்கான விதிகளை வடிவமைப்பதற்காக 5-ஆவது முறையாக அரசு கால அவகாசத்தை நீட்டிப்பு செய்துள்ளது.

வழக்கமாக நாடாளுமன்றப் பணி குறித்த கையேட்டின் படி, எந்தவொரு சட்டத்துக்கான விதிமுறைகளையும் வகுக்க குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்த 6 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் அல்லது கால நீட்டிப்பு கோர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து: 15 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

பாஜகவை மக்கள் மன்னிக்க மாட்டாா்கள்: மம்தா பானா்ஜி

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

திரவ நைட்ரஜன் கலந்த உணவை தவிா்க்க பிரேமலதா வேண்டுகோள்

SCROLL FOR NEXT