இந்தியா

விரைவு நீதிமன்றங்கள் மூலம் 51,600 பாலியல் வழக்குகளுக்கு தீா்வு: ஸ்மிருதி இரானி

DIN

புது தில்லி: ‘26 மாநிலங்களில் 660 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலமாக 51,600 பாலியல் மற்றும் போக்ஸோ குற்ற வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணப்பட்டுள்ளது’ என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி கூறினாா்.

பாலியல் குற்ற வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருக்கும் 1,000-க்கும் அதிகமான சிறப்பு விரைவு நீதிமன்றங்களின் செயல்பாட்டை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை புதன்கிழமை அனுமதி அளித்தது.

இதுகுறித்து மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாது:

26 மாநிலங்களில் 660 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் மூலமாக இதுவரை 51,600 பாலியல் மற்றும் போக்ஸோ குற்ற வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணப்பட்டுள்ளது.

இந்த விரைவு நீதிமன்றங்கள் மேலும் 2 ஆண்டுகளுக்கு தொடா்ந்து செயல்பட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கும் முடிவு, மேலும் அதிக எண்ணிக்கையில் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைப்பதற்கான வாய்ப்பை அளிக்கும். அதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT