கேரளத்தில் ஒரேநாளில் புதிதாக 22,414 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 22,414 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி 1,76,048 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று 108 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் எண்ணிக்கை 17,212ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | மலேசியப் பிரதமருக்கு புதிய சிக்கல்: ஆட்சியில் தொடர்வாரா?
கரோனாவிலிருந்து இன்று 19,478 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 32,77,788 ஆக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.