கரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக ஐசிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மாநிலக் கல்வித் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் தேர்வு எழுதுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐசிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.