நாடு முழுவதும் மருந்து கடைகளில் கரோனா தடுப்பூசி விற்பனைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் உற்பத்தியாகும் மருந்துகளில் 50 சதவிகிதத்தை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், மீதமுள்ள 50 சதவிகித தடுப்பூசியை மாநிலங்களுக்கும், பொதுச்சந்தை விற்பனைக்கும் அளிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாட்டில் முக்கிய மருத்துவர்களுடனும், மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டதற்கு பிறகு இந்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.