கரோனா பொது முடக்க 5-ம் கட்ட தளர்வுகளில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகள் செயல்பட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
கரோனா பொது முடக்கத்தின் 5-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
திரையரங்குகள், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்டவை அக்டோபர் 15 முதல் மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் 50 சதவிகித இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 5-ம் தேதி முதல் ஹோட்டல்கள், மதுபான விடுதிகள் உள்ளிட்டவை 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் திறப்பது பற்றி அக்டோபர் 15-க்குப் பிறகு பெற்றோர்களின் கருத்தைக் கேட்டறிந்து மாநில அரசுகளே முடிவெடுத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அக்டோபர் 31 வரை பொது முடக்கம் கடுமையாகப் பின்பற்றப்படும்.