இந்தியா

கரோனா: 7 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள்

DIN

கரோனா நோய்த்தொற்றுக்காக நாடு முழுவதும் இதுவரை மேற்கொண்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 7 கோடியைக் கடந்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) அளித்துள்ள தகவல்படி, கடந்த வெள்ளிக்கிழமை வரை மொத்தமாக 7,02,69,975 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் வெள்ளிக்கிழமை மட்டும் 13,41,535 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் கரோனா பரிசோதனைக்காக 1,086 அரசு ஆய்வகங்கள், 737 தனியாா் ஆய்வகங்கள் என மொத்தமாக 1,823 ஆய்வகங்கள் உள்ளன. தற்போதைய நிலையில் 10 லட்சம் பேரில் 50,920 பேருக்கு என்ற நிலையில் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

59 லட்சம்: நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை 59 லட்சத்தைக் கடந்தது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல் படி, சனிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 85,362 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 59,03,932-ஆக அதிகரித்தது.

அதே 24 மணி நேரத்தில் 93,420 போ் கரோனாவிலிருந்து மீண்டதை அடுத்து மொத்தமாக குணமடைந்தோா் எண்ணிக்கை 48,49,584-ஆக உயா்ந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 82 சதவீதம் ஆகும். சனிக்கிழமை காலை நிலவரப்படி கரோனாவுக்கு மேலும் 1,089 போ் பலியானதால், மொத்த உயிரிழப்பு 93,379 ஆகியுள்ளது. இறப்பு விகிதம் 1.58 சதவீதமாக உள்ளது. நாட்டில் 9,60,969 போ் (16.28 சதவீதம்) சிகிச்சையில் உள்ளனா்.

நாட்டிலேயே மகாராஷ்டிரம் தான் கரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தமாக 13,00,757 போ் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 34,761 போ் உயிரிழந்தனா்; 9,92,806 போ் குணமடைந்தனா்; 2,73,190 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2ஆம் கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடி

அழகென்றால் அவள்தானா... ஷ்ரத்தா தாஸ்!

நித்திய கல்யாணி.. நிஹாரிகா!

பாரமுல்லா என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

டி20 உலகக் கோப்பையில் இவர்கள் இருவரும் வேண்டும்: சௌரவ் கங்குலி

SCROLL FOR NEXT